• Wed. Jun 18th, 2025

24×7 Live News

Apdin News

கோவை அருகே தமிழக–கேரள எல்லையில் நகை வியாபாரியிடம் ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளை, பின்னணி என்ன?

Byadmin

Jun 18, 2025


தமிழக–கேரள எல்லை, தங்கம், கொள்ளை, சென்னை

பட மூலாதாரம், TNPOLICE

படக்குறிப்பு, ஜெய்சன் ஜேக்கப் பயணித்த கார்

கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து தங்கக்கட்டிகளை வாங்கிச் சென்ற கேரள நகை வியாபாரியிடம், தமிழக–கேரள எல்லையில் வைத்து காரை மடக்கி ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் ஒன்றே கால் கிலோ தங்கக்கட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நகை வியாபாரி சென்ற காரை லாரியை குறுக்காக நிறுத்தி மடக்கிய கும்பல், கொள்ளையடித்த பின், லாரியை வேறிடத்தில் நிறுத்திவிட்டுத் தப்பியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மலையாளத்தில் பேசியதால், தமிழக போலீசார் 5 தனிப்படைகளை கேரள போலீசார் உதவியுடன் கேரளாவில் தேடுதல் வேட்டையைத் தொடர்கின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள பாலக்கல் என்ற இடத்தில் ஜேபி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை நடத்தி வருபவர் ஜெய்சன் ஜேக்கப் (வயது 57). இவர் சென்னையில் தங்கக்கட்டிகளை வாங்கி வந்து, நகைத்தொழிலாளர்களை வைத்து, அணிகலன்கள் செய்து அதை விற்பனை செய்யும் தங்கப்பட்டறையும் நடத்தி வருகிறார். இவரிடமிருந்துதான் கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று ஒன்றே கால் கிலோ தங்கக்கட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

காரின் குறுக்கே லாரியை நிறுத்திய கொள்ளையர்கள்

தமிழக–கேரள எல்லை, தங்கம், கொள்ளை, சென்னை

பட மூலாதாரம், TNPOLICE

படக்குறிப்பு, கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட லாரி

இந்த சம்பவம் பற்றி கோவை மாவட்ட காவல்துறைக்கு உள்பட்ட கந்தே கவுண்டன்சாவடி போலீசார் பகிர்ந்த தகவலின்படி, சென்னையில் செளகார் பேட்டையில் தங்கக்கட்டிகளை வாங்கி வந்து, திருச்சூரில் உள்ள தனது தங்கப்பட்டறையில் , அணிகலன்கள் செய்து விற்கும் தொழிலை ஜெய்சன் ஜேக்கப் செய்து வருகிறார். கேரள தொழிலாளர்கள் செய்யும் இந்த நகைகளுக்கு சென்னையிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

By admin