• Fri. Apr 25th, 2025

24×7 Live News

Apdin News

கோவை ஈஷா பள்ளி ஊழியர்கள் மீது போக்சோ வழக்கு ஏன்? – மாணவரின் பாலியல் குற்றச்சாட்டு என்ன?

Byadmin

Apr 24, 2025


பாலியல் புகார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஈஷா இருப்பிடப் பள்ளியில் படிக்கும்போது சக மாணவர் ஒருவரால் தன் மகன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கோவை ஈஷா யோகா மையத்தை சேர்ந்த 4 ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஈஷா யோகா மையம், புகார் தெரிவித்துள்ள பெண், யோகா மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியபோது, பல்வேறு தரப்பினரும் கூறிய புகாரின்படி, அவரை வெளியேற்றிவிட்டதாகவும் அதன்பின் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் ஈஷா யோகா மையத்துக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதால் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல உள்ளதாக அந்த பெண் பிபிசி தமிழிடம் கூறியுள்ளார்.

By admin