• Sun. Oct 27th, 2024

24×7 Live News

Apdin News

கோவை: எரிவாயுக் குழாய், மின்கோபுர திட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு ஏன்? முழு பின்னணி

Byadmin

Oct 27, 2024


விவசாயம், விவசாயிகள், கோவை
படக்குறிப்பு, கோவை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.

‘‘நிலம் உங்களுடையதுதான்; ஆனால் அதில் நீங்கள் விவசாயம் செய்யக்கூடாது; நாங்கள் நிலத்தை எடுக்கவும் மாட்டோம்; இழப்பீடும் தர மாட்டோம்…இப்படி ஒரு நிபந்தனையை விதித்தால், ஒரு விவசாயி என்னதான் செய்ய முடியும்?’’ என்று கேட்கிறார் விவசாயிகள் சங்கத்தின் (சாதி மதம் கட்சி சார்பற்றது) மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு வழங்கும் ‘பைப் லைன் கேஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கும், எரிவாயு வாகனங்களுக்கான பங்க் அமைப்பதற்கும் குழாய்களைப் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த எதிர்ப்பு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுகிறது.

‘‘எரிவாயு குழாய் பதிக்கும் தூரத்தை 100 கி.மீ. லிருந்து 60 கி.மீ. ஆகக் குறைக்கலாம். அரசு நிலம், ஓஎஸ்ஆர் நிலம், விவசாயம் இல்லாத நிலம் என மாற்று வழி இருந்தால் கொண்டு செல்லலாம். போடவே கூடாது என்பது வளர்ச்சிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்.’’ என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை ஜியாகிரபிகல் ஏரியா மேனேஜர் கார்த்திக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin