• Wed. Aug 27th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: ஒரே பள்ளியில் படித்த மாணவர்களை குறிவைத்து மோசடி – க்யூஆர் கோட் மூலம் ஏமாற்றியது எப்படி?

Byadmin

Aug 27, 2025


கோவையில் ஒரே பள்ளியில் படித்த மாணவர்களின் பெற்றோரை குறிவைத்து பல லட்சம் மோசடி

பட மூலாதாரம், Getty Images

கோவையில் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் பெற்றோரை தொடர்புகொண்டு மாநில அரசின் கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் கூறி, வங்கி விவரங்களை பெற்று பல லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணத்தை இழந்த பெற்றோர் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவையில் நடந்த சைபர் மோசடி

வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை முகமைகளிலிருந்து அழைப்பதாக கூறி, நாடு முழுவதும் பொதுமக்களை மிரட்டி ஆன்லைன் மூலம் சிலர் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்வதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.

இந்நிலையில், சமீப காலமாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் அழைப்பதாகக் கூறி, கல்லூரியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அழைத்து ஜி.பே (Gpay) மூலம் மர்ம கும்பல் பண மோசடியை அரங்கேற்றி வருகிறது.

தற்போது கோவை கிக்கானிக் பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களை குறிவைத்து கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, அவர்களின் வங்கி விவரங்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை சுமார் 43 மாணவர்களின் பெற்றோர் தமது பணத்தை இழந்ததாக கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

By admin