• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

கோவை: கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது – மழைநீரில் சிக்கிய பேருந்து என்ன ஆனது?

Byadmin

Oct 14, 2024


கோவை, கனமழை
படக்குறிப்பு, சிவானந்தா காலனி, கோவை

கோவையில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இன்று மாலை 3 மணிக்கு மேல், மிகக்கடுமையான இடியும், மின்னலுமாக இருந்தது. சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்த அடர்மழை காரணமாக, கோவை மாநகரமே ஸ்தம்பித்தது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டலச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 25 மாவட்டங்களில், அக்டோபர் 13-ஆம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதில் கோவைக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுக்கப்பட்டிருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கோவை, கனமழை

வெள்ளத்தில் மிதந்த சாலைகள்

கோவை நகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளமென பாய்ந்தோடியது. அவிநாசி சாலையில், 10 கி.மீ., துாரத்துக்கு தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் கட்டும் பணி நடப்பதையொட்டி, அதன் இரு புறங்களில் உள்ள சர்வீஸ் சாலைகளில், மழைநீர் செல்வதற்கான வடிகால்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அவை முழுமையடையாததாலும், ஆங்காங்கே தடைகள் இருப்பதாலும், மழை வெள்ளம் அவிநாசி சாலை முழுவதும் ஆறு போல ஓடியது.

By admin