• Fri. Sep 12th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தால் 1400 ஏக்கர் நிலம் பாதிப்பா? எதிர்க்கும் விவசாயிகள்

Byadmin

Sep 12, 2025


கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தால் 1400 ஏக்கர் நிலம் பாதிப்பா? எதிர்க்கும் விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கோவை கிழக்கு புறவழிச்சாலைக்கு பல்வேறு கிராமங்களில் அளவீடு செய்து குறியிடும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு செயல்படுத்தாத இத்திட்டத்தை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க திட்டமிடுவதால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்மொழிந்த திட்டத்துக்கு மாற்றாக புதிய அளவீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமென்று தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள கோவை மாநகரம் 254 சதுர கி.மீ. பரப்புடையது.

By admin