• Wed. Jun 4th, 2025

24×7 Live News

Apdin News

கோவை–கேரளா இடையே தங்கம் கடத்தல் அதிகரிப்பு: ஹவாலா முறையில் கைமாறும் பணம்

Byadmin

Jun 2, 2025


தங்கக் கடத்தல், ஹவாலா மோசடி, தமிழ்நாடு, கேரளா, கோயம்புத்தூர்

பட மூலாதாரம், Kerala Police

படக்குறிப்பு, சாகர், மணிகண்டன், சந்தீப்

கோவையிலிருந்து பிரத்யேக உடைக்குள் மறைத்து பைக்கில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.72 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், கோவை–கேரளா இடையே தங்கக் கடத்தலும், அதற்காக ஹவாலா முறையில் பணப்பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தங்கம் மீதான இறக்குமதி வரியை ஒரு சதவிகிதமாக்கும் வரை தங்கக் கடத்தலைத் தடுப்பது கடினம் என்கின்றனர் தங்க நகை உற்பத்தியாளர்கள்.

தமிழக–கேரள எல்லையில் கோவை நகரம் அமைந்துள்ளதால், கோவைக்கும், கேரள மாநிலத்துக்குமான சமூக, வர்த்தகத் தொடர்புகள் அதிகம். மணல், செங்கல் போன்றவையும் அதிகளவில் கடத்திச் செல்லப்படுவதாக வருவாய் துறை தகவல்கள் கூறுகின்றன.

அதேபோன்று, இரு மாநிலங்களிலிருந்தும் போதைப் பொருட்கள், ரகசிய முறையில் கடத்திச் செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது என, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறுகின்றனர்.

By admin