• Mon. Jun 30th, 2025

24×7 Live News

Apdin News

கோவை-திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடையே நீர் பங்கீட்டில் பாரபட்சமா? – பிஏபி கால்வாய் பாசன விவகாரத்தின் முழு பின்னணி

Byadmin

Jun 30, 2025


பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்தின் கடைமடை பகுதி விவசாயிகளான காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகளுக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறி, தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் 124 கி.மீ. துாரம் கால்வாயில் வரும்போது தண்ணீர் திருட்டு, நீர்க்கசிவால் மிகவும் குறைந்துவிடுவதால் கூடுதல் தண்ணீர் கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால், மற்ற பகுதிகளை விட வெள்ளகோவில் கால்வாயில் கூடுதல் தண்ணீர் விநியோகித்தும் அரசியல் காரணங்களுக்காக போராடுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. என்ன நடக்கிறது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் உள்ள பாசனத்திட்டங்களில் முக்கியமானது, பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டம். சுருக்கமாக பிஏபி என்று அழைக்கப்படும் இந்த திட்டம், காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்டது.

By admin