• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

கோவை: நாய் கடித்து ஒரே வாரத்தில் இருவர் உயிரிழப்பு – மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

Byadmin

Oct 24, 2024


நாய் கடியினால் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஒரு இளம் பெண் உட்பட அடுத்தடுத்து இரண்டு பேர் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நாய்கடி சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசுபொருளான நிலையில், கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரேபிஸ் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருந்துகள் இல்லாததால் அது வராமல் தடுக்க நாய் கடித்த உடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரிழப்புகளை தவிர்க்கும் வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

57 வயது ஆண் ஒருவர், நாய் கடித்து கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி அன்று இறந்துவிட்டார். ‘‘அவருக்கு தெரு நாய் கடித்ததா, வீட்டு நாய் கடித்ததா என்று தெரியாது; ஆனால் தாமதமாக வந்ததால், அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் அவரை காப்பாற்ற இயலாமல் போய் விட்டது’’ என்று பிபிசி தமிழிடம் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.

By admin