• Wed. Nov 5th, 2025

24×7 Live News

Apdin News

கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை சுட்டுப்பிடித்தது எப்படி?

Byadmin

Nov 5, 2025


கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
படக்குறிப்பு, காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்

கோவையில் கல்லுாரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

”குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகள் துடியலுார் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. அவர்களை கைது செய்யச் சென்றபோது காவலர் ஒருவரைத் தாக்கியதால் அவர்களை சுட்டுப்பிடிக்க வேண்டியிருந்தது. இதில் குற்றவாளிகள் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.” என்றார்.

காவல் ஆணையர் விளக்கியபடி, இவ்வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா என்கிற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காளீஸ்வரன், கருப்பசாமி ஆகிய இருவரும் சகோதரர்கள். மூவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



By admin