• Wed. Dec 17th, 2025

24×7 Live News

Apdin News

கோவை பெண் வீட்டுக்கு ஆயிரக்கணக்கான பார்சல் அனுப்பியவர் பிடிபட்டது எப்படி?

Byadmin

Dec 17, 2025


கோவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கோவையில் தனது நிறுவனத்திலிருந்து விலகி, தனியாக நிறுவனம் துவக்கிய பெண்ணுக்கு, நுாற்றுக்கணக்கில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பிய ஒரு நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘அந்தப் பெண் நிறுவனத்திலிருந்து விலகியதால், தனது தொழில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு பழி வாங்கவே தான் இப்படிச் செய்ததாகவும்’ அவர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் பிபிசி தமிழிடம் விளக்கினார்கள்.

நடந்தது என்ன?

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த ஆண்டிலிருந்து வெவ்வேறு கூரியர்கள் மூலமாக பார்சல்களில் பலவித பொருட்கள் வந்துள்ளன. இவர் எதுவுமே ஆர்டர் செய்யாத நிலையில், இவருடைய பெயரில் இவரின் வீட்டு முகவரிக்கு, இவரின் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், பணம் கொடுத்து பார்சல் வாங்கும் முறையில் (CoD) அவை வந்திருந்தன. இதனால் அந்த பெண் பெரும் குழப்பம் அடைந்தார்.

By admin