• Sat. Feb 8th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குட முழுக்கை தமிழில் நடத்த அரசு அனுமதிக்காதது ஏன்?- பின்னணி என்ன?

Byadmin

Feb 8, 2025


தமிழில் குடமுழுக்கு நடத்த அனுமதி மறுப்பு

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, பேரூர் கோவில்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

மேற்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா, வரும் பிப்ரவரி 10 அன்று நடக்கவுள்ள நிலையில், அதனை தமிழில் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.

அந்த கோரிக்கையை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஏற்க மறுத்துள்ளது.

இதற்காக எடுக்கப்பட்ட சட்டரீதியான முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், ‘தமிழில் மட்டும் குட முழுக்கு நடத்த முடியாது; தமிழிலும் நடத்தப்படும்’ என்று துறை அமைச்சர் சேகர்பாபு பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் குடமுழுக்கு விழா, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று நடக்கவுள்ளது.



By admin