• Fri. Sep 19th, 2025

24×7 Live News

Apdin News

கோவை ரூ.15,000 கோடி மென்பொருள் ஏற்றுமதி செய்து சாதித்தது எப்படி?

Byadmin

Sep 19, 2025



ரூ.15,000 கோடி மென்பொருள் ஏற்றுமதி: இரண்டாம் நிலை நகரங்களில் கோவை முதலிடம் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கடந்த நிதியாண்டில் (2024-25) ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் மென்பொருள் ஏற்றுமதி செய்ததன் மூலமாக, கோவை இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில் மிக முக்கிய மென்பொருள் தொழில்நகரமாக மாறியுள்ளது.

பல மென்பொருள் நிறுவனங்களும் கோவையில் கால் பதித்திருப்பதற்கு, இந்த நகரில் கிடைக்கும் தரமான மனிதவளமே காரணமென டைடல் பார்க் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால்தான், கோவையை ஐடி நிறுவன ஊழியர்களும், நிறுவனங்களும் தேர்வு செய்வதாக தொழில் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

நகரின் பரவலான வளர்ச்சியும் மென்பொருள் நிறுவனங்கள், கோவையைத் தேர்வு செய்ய முக்கியக் காரணமென்று அரசின் ‘வழிகாட்டி தமிழ்நாடு’ நிர்வாகிகள் கூறுகின்றனர்.

By admin