• Thu. Oct 30th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: 13 நாள் குழந்தையை ரயிலில் இருந்து வீசிய தந்தை – சடலம் கிடைக்காமலே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது எப்படி?

Byadmin

Oct 29, 2025


கோவை, குழந்தை கொலை வழக்கு, ஆயுள் தண்டனை

பட மூலாதாரம், TN Police

படக்குறிப்பு, குற்றவாளி மாரிச்செல்வம்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்

”இந்த குழந்தை நம் இருவருக்கும் பிறந்ததுதான். உங்களுக்கு சந்தேகமிருந்தால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம் என்றேன். நானே குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன், குழந்தையை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சினேன். அதைக் கேட்காமல் குழந்தையைப் பறித்து, ‘எனக்குப் பிறக்காத குழந்தை எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்’ என்று கூறி, குழந்தையை ரயிலில் இருந்து வெளியே வீசிவிட்டான்!”

தனக்குப் பிறந்த 13 நாட்களே ஆன பெண் குழந்தையை தன் கணவன் ரயிலுக்கு வெளியே வீசி எறிந்ததைப் பற்றி தாய் கவிதா காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ள வார்த்தைகள் இவை.

வீசி எறியப்பட்ட குழந்தையின் உடல் கிடைக்காத நிலையிலும் இந்த வழக்கில், கவிதாவின் கணவன் மாரிச்செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



By admin