• Tue. Apr 29th, 2025

24×7 Live News

Apdin News

கோஹினூர் வைரம் முகலாயப் பேரரசிடம் இருந்து முதன்முதலில் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?

Byadmin

Apr 29, 2025


கோஹினூர் வைரத்தின் வரலாறு, நாதீர் ஷா, முகமது ஷா, ரங்கீலா, வரலாறு

பட மூலாதாரம், San Diego Museum of Art

முகலாயப் பேரரசு 18ஆம் நூற்றாண்டில் உலகின் செல்வாக்குள்ள பேரரசாக மட்டுமல்ல, செல்வம் மிக்க பணக்காரப் பேரரசுகளில் ஒன்றாகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட இந்தியாவின் வடக்குப் பகுதி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி என முகலாயப் பேரரசு பரந்து விரிந்திருந்தது.

வைரம் என்றாலே உலகின் மிகப் பிரபல வைரமான கோஹினூர் வைரத்தின் பெயர் பலரது நினைவுக்கு வரும். அந்த அரிய வைரம், அன்றைய முகலாய பேரரசர்களின் அலங்கார அரியணையான மயிலாசனத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வந்தாலும், காபூல் முதல் கர்நாடகா வரையிலான செழிப்பான நிலப்பரப்பு முகலாயர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் அனிதா ஆனந்த் எழுதிய ‘கோஹினூர் தி ஸ்டோரி ஆஃப் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட்’ (Koh-i-Noor: The History of the World’s Most Infamous Diamond) என்ற புத்தகத்தில், கோஹினூர் வைரம் தொடர்பான பல சரித்திரத் தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

By admin