• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

கௌரம்மா தனி ஆளாக 4 மகள்களை படிக்க வைத்து அரசு ஊழியராக்கியது எப்படி? ஒரு தாயின் மனஉறுதி ஜெயித்த கதை

Byadmin

Sep 23, 2025


நான்கு மகள்களுடன் தாய் கௌரம்மா
படக்குறிப்பு, நான்கு மகள்களுடன் தாய் கௌரம்மா

”திருமணம் செய்வித்து அனுப்பிவிடு. இத்தனை பேரை வீட்டில் வைத்துக்கொண்டால் எப்படி என பலர் கூறினர். இன்று என் நான்கு பிள்ளைகளுக்கும் அரசு வேலை உள்ளது. எங்களுக்கு இப்போது எந்தக் குறையும் இல்லை.”

கணவர் இறந்த பிறகும், கூலி வேலைக்குச் சென்று, கஷ்டப்பட்டு நான்கு மகள்களையும் படிக்க வைத்து அரசு ஊழியர்களாக ஆக்கிய தாய் கௌரம்மா பெருமையுடன் சொன்ன வார்த்தைகள் இவை.

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம், புங்கனூருக்கு அருகிலுள்ள வேபமாகுலபல்லே கிராமத்தைச் சேர்ந்த கௌரம்மா – முனிவெங்கடப்பா தம்பதிக்கு நான்கு மகள்கள்… வீணா குமாரி, வாணி, வனஜாக்ஷி, மற்றும் ஷிரிஷா.

அவர்களின் சிறுவயதிலேயே தந்தை இறந்தபோதிலும், தாயின் உழைப்பு வீணாகாமல், போட்டிபோட்டுப் படித்து, நான்கு பேரும் அரசு வேலைகளைப் பெற்றுள்ளனர்.

By admin