• Wed. Dec 3rd, 2025

24×7 Live News

Apdin News

சஞ்சார் செயலியின் முக்கிய நோக்கம் என்ன? பயனர்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள்

Byadmin

Dec 3, 2025


இந்த முடிவு தொழில்நுட்ப வல்லுநர்கள், டிஜிட்டல் உரிமைகள் குழுக்கள் மற்றும் சாதாரண பயனர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பேம், மோசடி போன்ற செயல்பாடுகளை சஞ்சார் சாத்தி செயலியில் புகாரளிக்கலாம்.

மத்திய அரசு சமீபத்தில், புதிதாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே (pre-installed) பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவில் ஒரு செயலி இவ்வாறு ஒவ்வொரு சாதனத்திலும் நிரந்தரமாக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டது இதுவே முதல் முறை.

இந்த முடிவு தொழில்நுட்ப வல்லுநர்கள், டிஜிட்டல் உரிமை குழுக்கள் மற்றும் சாதாரண பயனர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது.

அதுகுறித்து எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, “இந்தச் செயலி வேண்டாமெனக் கருதினால் மக்கள் அதைத் தங்கள் மொபைலில் இருந்து நீக்கிவிடலாம்,” என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு என்ற பெயரில், இந்த நடவடிக்கை குடிமக்களின் தனியுரிமையைப் பாதிக்குமா? இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின்படி பொருந்துகிறதா? உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளிலும் இதே போன்ற செயலிகள் உள்ளனவா?

By admin