• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளை கேட்கும் பாஜக: 40-ஐ கொடுத்து 20-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும் அதிமுக | assembly elections BJP asks 50 seats to contest AIADMK gives 40 and to choose 20

Byadmin

Sep 6, 2025


சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 50 தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று பாஜக கேட்டு வரும் நிலை​யில், நாற்​பது தொகு​தி​களை கொடுக்​கிறோம், அதில் இருபதை தேர்ந்​தெடுத்து சொல்​லுங்​கள் என அதி​முக கூறி வரு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தலுக்கு இன்​னும் 7 மாதங்​களே இருக்​கும் நிலை​யில், அனைத்​துக் கட்​சிகளும் சுற்​றுப்​பயணம், மக்​கள் சந்​திப்பு என தேர்​தலை எதிர்​கொள்​ளத் தயா​ராகி வரு​கின்றன. அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம்; தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் மாநிலம் முழு​வதும் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

இதற்​கிடை​யில், பாஜக கூட்​ட​ணி​யில் தான் ஓரங்​கட்​டப்​படு​வ​தாக உணர்ந்த ஓ.பன்​னீர்​செல்​வம், கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக அறி​வித்​தார். ஆனால், அவரை மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க பாஜக பெரிய அளவில் முயற்​சிக்​க​வில்​லை. இதற்​கிடை​யில், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து அமமுக வெளி​யேறு​வ​தாக 2 நாட்கள் முன்பு டிடிவி தினகரன் அதிரடி​யாக அறி​வித்​தார். தொடர்ந்​து, தவெக தலை​மை​யில் 3-வது அணி அமை​யும் என்று கூறி பரபரப்​பை​யும் ஏற்​படுத்​தி​னார். அதே​நேரத்​தில், பாமக, தேமு​தி​கவை கூட்​ட​ணி​யில் தக்​கவைக்க பாஜக முயற்​சித்து வரு​கிறது.

இச்​சூழலில், அதி​முக​வுடன் தொகு​திப் பங்​கீடு குறித்த பேச்​சு​வார்த்​தை​யில் பாஜக மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளது. தற்​போது​வரை அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக மட்​டுமே இடம்​பெற்​றிருக்​கும் நிலை​யில், மற்ற கட்​சிகள் கூட்​ட​ணிக்​குள் வரு​வதற்கு முன்​பு, தங்​களுக்​கான தொகு​தி​களை முன்​கூட்​டியே கேட்​டுப் பெற்​று​விட வேண்​டும் என்று பாஜக விரும்​பு​கிறது.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக 20 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 4-ல் வெற்றி பெற்ற நிலை​யில், தற்​போது வாக்கு சதவீதம் உயர்ந்​திருப்​ப​தால், இம்​முறை கூடு​தலாக தொகு​தி​களை கேட்​டுப் பெற பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அதன்​படி, 50 தொகு​தி​களை அதி​முக​விடம் இருந்து பாஜக கேட்​டுப் பெற விரும்​பு​கிறது. ஆனால், கடந்த தேர்​தலைப் போலவே இம்​முறை​யும் 20 முதல் 25 தொகு​தி​களை மட்​டும் வழங்க அதி​முக முன்​வந்​திருப்​ப​தாக கூறப்​படு​கிறது. அந்த வகை​யில் 40 தொகு​தி​களை கொடுத்​து, அதிலிருந்து 20 தொகு​தி​களை தேர்ந்​தெடுக்​கு​மாறு பாஜகவை அதி​முக நிர்​பந்​திப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து பாஜக மூத்த நிர்​வாகி ஒரு​வரிடம் கேட்​டபோது, “மொத்​தம் 50 தொகு​தி​கள் வேண்​டுமென அதி​முக​விடம் வலி​யுறுத்​தி​யுள்​ளோம். ஆனால், வரு​வாய் மாவட்​டத்​துக்கு ஒரு தொகுதி என 40 தொகு​தி​களை வழங்​கு​கிறோம். அதிலிருந்து 20 தொகு​தி​களை தேர்ந்​தெடுத்து சொல்​லுங்​கள் எனவும் அதி​முக எங்​களிடம் கூறி​யுள்​ளது. அது​மட்​டுமின்​றி, வானதி உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் குறிப்​பிட்ட தொகு​தி​களைப் பெற வேண்​டுமென மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனிடம் முறை​யிட்டு வரு​கிறார்​கள். அதி​முக​வும், பாஜக​வுக்கு வெற்றி வாய்ப்​புள்ள தொகு​தி​கள் எவை என்​பதை ஆய்​வுசெய்​து, அவற்றை பாஜக​வுக்கு ஒதுக்க முடிவு செய்​திருப்​ப​தாகத் தெரி​கிறது.

எனினும், நாங்​கள் முடிந்தவரை​யில் அதி​க​மான தொகு​தி​களை அதி​முக​விடம் கேட்டு பெற முயற்​சிப்​போம். அதன்​மூலம் கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலை விட அதிக எண்​ணிக்​கையி​லான உறுப்​பினர்​கள்​ பாஜக​வுக்​கு கிடைப்​பார்​கள்​ என நம்​பு​கிறோம்​’’ என்​றார்​.



By admin