• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்  | monsoon session of the Assembly begins tomorrow

Byadmin

Oct 13, 2025


சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்ட தொடர் நாளை தொடங்​கு​கிறது. பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்து​வது என்​பது குறித்து முடி​வெடுப்​ப​தற்​கான அலு​வல் ஆய்​வுக்​குழு இன்று தலைமை செயல​கத்​தில் நடை​பெறவுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் நடப்​பாண்​டுக்​கான முதல் கூட்​டம் கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்​றது. பின்​னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அடுத்த நாள் வேளாண் பட்​ஜெட் தாக்​கலானது. இரு பட்​ஜெட்​கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடை​பெற்​றது. நிறை​வாக, அமைச்​சர்கள் தங்​கம் தென்​னரசு மற்​றும் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் ஆகியோர் பதி​லுரை அளித்​தனர்.

முன்​ன​தாக, அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி, கடந்த மார்ச் 24-ம் தேதி துறை ரீதி​யான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி ஏப். 29-ம் தேதி வரை நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​தொடரின்​போது தமிழக அரசு சார்​பில் 18 சட்ட மசோ​தாக்​கள் அறி​முகம் செய்து நிறைவேற்​றப்​பட்​டன. இதையடுத்​து, மார்ச் 24-ம் தேதி சட்​டப்​பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல், கூட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டது.

சட்​டப்​பேரவை விதி​கள்​படி ஒரு பேரவை கூட்​டம் முடிவுற்​றால், அடுத்த கூட்​டம் 6 மாதங்​களில் நடை​பெற வேண்​டும். அதன் அடிப்​படை​யில் வரும் 14-ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத்​தொடர் தொடங்​க​வுள்​ளது என்று பேரவை தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார். இந்​நிலை​யில் பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது, மேற்​கொள்ள வேண்​டிய அலு​வல்​கள் குறித்து முடிவு செய்​வதற்​கான அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டம் இன்று தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெறவுள்​ளது. இந்த கூட்​டத்​தில் எடுக்​கப்​படும் முடிவு​களை பேரவை தலை​வர் அப்​பாவு அறிவிக்​க​வுள்​ளார். 3 அல்​லது 4 நாட்​கள் பேரவை கூட்​டம் நடை​பெறலாம் என்று கூறப்​படு​கிறது.

சட்​டப்​பேரவை கூட்​டம் முதல் நாளில் முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் 8 பேரின் மறைவுக்கு இரங்​கல் குறிப்பு வாசிக்​கப்​பட​வுள்​ளது. வால்​பாறை எம்​எல்ஏ அமுல் கந்​த​சாமி மறைவு மற்​றும் முக்​கியப் பிர​முகர்​கள் மறைவுக்கு இரங்​கல் தெரி​வித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​படு​கிறது. இத்​துடன் பேர​வை​யின் முதல் நாள் நிகழ்வு முடிவடை​யும். அடுத்​தடுத்த நாட்​களில் பேர​வை​யில் பல்​வேறு நிகழ்​வு​கள் நடை​பெறவுள்​ளன. 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான கூடு​தல் செல​வினம் தொடர்​பான மானியக் கோரிக்​கை தாக்​கல்​ செய்​யப்​பட்​டு நிறைவேற்​றப்​படவுள்​ளது.



By admin