• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு: நாடளாவிய ரீதியில் 31 பேர் கைது

Byadmin

Apr 6, 2026


நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த 31 சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளரும், உதவி காவல் கண்காணிப்பாளருமான எஃப்.யு. வூட்லர், தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனைகளின் போது, 47,006 லீற்றர்  டீசல், 2,668 லீற்றர்  பெற்றோல்மற்றும் 2,706 லீற்றர் மண்ணெண்ணெய் உட்பட 52,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், அதிகரித்து வரும்  எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியில், சட்டவிரோதமாக எரிபொருளைப் பதுக்கி வைத்து பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் சந்தேகநபர்களைக் குறிவைத்து,  முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் காவல்துறை தலைமை ஆய்வாளரின் வழிகாட்டுதலின்பேரில்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

By admin