• Sun. May 11th, 2025

24×7 Live News

Apdin News

சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல் – இந்தியாவும் பாகிஸ்தானும் கூறியது என்ன?

Byadmin

May 11, 2025


இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஜம்முவில் சேதடைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் (மே 10-ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம்)

சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்த சில மணி நேரத்திலேயே அத்துமீறல்களில் ஈடுபட்டதாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் வெடிச்சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, ”இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே எட்டப்பட்ட உடன்பாட்டை பாகிஸ்தான் மீறி வருகிறது” இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம்சாட்டினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “சில பகுதிகளில் இந்தியாவால் மீறல்கள் செய்யப்பட்ட போதிலும் சண்டை நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது” என்று கூறியது.

கடந்த நான்கு நாட்களில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த சண்டை இரு போட்டியாளர்களுக்கும் இடையிலான மிக மோசமான இராணுவ மோதலாக உள்ளது.

By admin