• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

சத்ரபதி சிவாஜி சூரத் நகரைச் சூறையாடி கொள்ளையடித்த செல்வத்தின் மதிப்பு என்ன?

Byadmin

Jan 8, 2026


சிவாஜி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிவாஜி இரண்டு முறை சூரத் மீது படையெடுத்து சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கொள்ளையடித்தார்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சூரத்தை இரண்டு முறை கொள்ளையடித்தார். இந்த இரண்டு தாக்குதல்களிலும் சிவாஜியின் படைகள் பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்தன. ஆனால், இந்த இரண்டு தாக்குதல்களின் போதும் அவர்களால் சூரத்தில் இருந்த ஆங்கிலேயர்களிடம் கொள்ளையடிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் சூரத்தில் ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுகாரர்களின் கிடங்குகள் இருந்தன. இந்தக் கிடங்குகளில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன. ஆனால், மராத்தியர்களால் ஆங்கிலேயர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாமல் போனது ஏன்?

இதைப் புரிந்து கொள்ள, நாம் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரத் அந்தக் காலகட்டத்தில் செல்வச் செழிப்புடன் வளமையாக இருந்தது. ஆனால் அந்நிய ஆக்கிரமிப்பைத் தடுக்க அங்கு பாதுகாப்பு வசதிகள் ஏதும் இருக்கவில்லை. அதன் பாதுகாப்பைப் பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை.

இந்த நிலையில், தெற்கில் மராத்திய சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு எதிராக முகலாயர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை அதிகரித்திருந்தனர். எனவே, அதற்குப் பழிவாங்குவதற்காக சிவாஜியின் கவனம் சூரத் பக்கமாகத் திரும்பியது.

By admin