• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

சந்திரகுப்த மௌரியர்: தெருவில் விளையாடிய சிறுவனை சாணக்கியர் அரசனாக்கியது எப்படி?

Byadmin

Sep 7, 2025


சந்திரகுப்த மெளரியரின் உருவச்சிலை

பட மூலாதாரம், Life Span publisher

படக்குறிப்பு, மௌரியா என்ற சொல்லின் வேர் மயில் என்று பல அறிஞர்கள் நம்புகின்றனர் (சித்தரிப்புப் படம்)

சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் எழுதப்பட்ட பல நூல்களில் கூட குறிப்பிடப்படுவதிலிருந்தே சந்திரகுப்த மௌரியரின் செல்வாக்கை அறிந்துகொள்ளலாம்.

மெகஸ்தெனீஸின் ‘இண்டிகா’ உள்ளிட்ட நூல்கள் இதில் அடங்கும் என்றாலும் எந்த நூலின் அசல் பிரதியும் எங்கும் கிடைக்கவில்லை என்பதால் மௌரிய வம்சத்தை நிறுவிய சக்ரவர்த்தியின் ஆட்சிக் காலத்தின் உண்மையான விவரங்கள் கிடைக்கவில்லை.

அவரது பேரன் அசோகர் கூட தனது கல்வெட்டுகளில் தனது தாத்தாவை பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

சந்திரகுப்த மௌரியரைப் பற்றி வரலாற்றாசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. பௌத்த மத ஆதாரங்களான ‘தீக நிகாய’ மற்றும் ‘திவ்யாவதான்’ ஆகியவற்றில் மௌரியர்கள் பிப்பலிவனில் ஆட்சி செய்த சத்திரிய வம்சத்தினராகக் கூறப்படுகிறது.

By admin