• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

சனிப் பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோவில் அறிவிப்பு என்ன? வாக்கியம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வேறுபடுவது ஏன்?

Byadmin

Mar 29, 2025


சனிப்பெயர்ச்சி, 2025 சனிப்பெயர்ச்சி, திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்

பட மூலாதாரம், thirunallarutemple.org

மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என திருக்கணிதப் பஞ்சாங்கம் கூறும் நிலையில், அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி இல்லை என திருநள்ளாறு கோவில் அறிவித்திருக்கிறது.

சனிப்பெயர்ச்சி எப்போது என்பதிலேயே முரண்பாடுகள் தோன்றுவது ஏன்? சனிப் பெயர்ச்சி தொடர்பான அறிவியல் உண்மை என்ன?

சனிப் பெயர்ச்சி எப்போது?

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 அன்று சனிப் பெயர்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தை நம்புபவர்கள், இந்த சனிப் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள், பூஜைகளைச் செய்யலாம் என்ற விளம்பரங்களும் தென்படுகின்றன. ஊடகங்களில் ஜோதிடர்களும் இதற்கான பலன்களைச் சொல்லிவருகின்றனர்.

ஆனால், சனீஸ்வரனுக்கு மிக முக்கியமான கோவிலாகக் கருதப்படும் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேவஸ்தானம், மார்ச் 29ஆம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை எனத் தெரிவித்துள்ளது. இது சனிப் பெயர்ச்சியை நம்பக்கூடிய பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

By admin