• Thu. Nov 6th, 2025

24×7 Live News

Apdin News

சபரிமலை:திருமணத்திற்காக எடுக்கப்பட்ட ஐயப்பன் கோவில் தங்கம் – சபரிமலை மோசடி புகாரின் முழு பின்னணி

Byadmin

Nov 6, 2025


சபரிமலை, இந்தியா, இந்து கோயில், தங்க திருட்டு, நீதிமன்றம், கேரளா

பட மூலாதாரம், Vivek Nair

படக்குறிப்பு, சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு (இந்தப் புகைப்படத்தில் உள்ள) அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தென் இந்தியாவின் புகழ்பெற்ற இந்து கோவிலான கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. காரணம், அந்தக் கோவிலின் சில சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல கோவில்களில், பெரும்பாலும் பக்தர்களின் நன்கொடை மூலம், சிலைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள் பொருத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் சபரிமலை கோவிலில் இந்த திருட்டு நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தங்கம் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்துள்ளது. போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னாள் உதவி பூசாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை கண்காணித்து வரும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர் விசாரணைகளை நடத்தி வருகிறது. அடுத்த அமர்வு புதன்கிழமை நடைபெற உள்ளது.

சபரிமலை, இந்தியா, இந்து கோயில், தங்க திருட்டு, நீதிமன்றம், கேரளா
படக்குறிப்பு, சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

திருடு போனது என்ன?

சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

By admin