• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

சமுத்திரகுப்தர்: ஒரு போரில் கூட தோற்காத, தங்க நாணயங்களை மட்டுமே வெளியிட்ட இந்திய அரசர் – யார் இவர்?

Byadmin

Jan 20, 2026


சமுத்திரகுப்தர், குப்த பேரரசு

பட மூலாதாரம், museumsofindia.gov.in

படக்குறிப்பு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சமுத்திரகுப்தர் காலத்தைச் சேர்ந்த இரண்டு நாணயங்கள்

சந்திரகுப்தர் முதுமையடைந்தபோது, பதவியைத் துறந்து, அரசாங்கத்தின் பொறுப்புகளைத் தனது மகன் சமுத்திரகுப்தரிடம் ஒப்படைத்தார்.

சமுத்திரகுப்தர், முதலாம் சந்திரகுப்தரின் மூத்த மகன் அல்ல.

சமுத்திரகுப்தர் தான் ஒரு தகுதியான வாரிசு என்பதை நிரூபித்தார். அவர் தனது விசுவாசம், நீதி மற்றும் வீரத்தால் தனது தந்தையின் இதயத்தை வென்றார். சமுத்திரகுப்தர், சந்திரகுப்தருக்குப் பிறகு பதவியேற்றது பற்றிய தெளிவான விவரிப்பு அலகாபாத்(தற்போது பிரயாக்ராஜ்) தூண் கல்வெட்டில் காணப்படுகிறது.

” சந்திரகுப்தர் தனது மகன் சமுத்திரகுப்தரைத் தழுவி, ‘நீ ஒரு சிறந்த ஆத்மா’ என்று கூறினார். சந்திரகுப்தர் இந்த வார்த்தைகளைக் கூறியபோது, மென்மையான உணர்ச்சியால் அவரது உடலில் இருந்த மயிர்க்கால்கள் அனைத்தும் சிலிர்த்தன.”

“இந்த அறிவிப்பு வெளியானவுடன், சில அரசவை உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர், ஆனால் மற்றவர்கள் மன சோர்வடைந்தனர். சந்திரகுப்தர் கண்ணீர் மல்க சமுத்திரகுப்தரைப் பார்த்து, ‘இனி உலகைப் பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு’ என்று கூறினார்.”

By admin