• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

சரண்யா: மலையேற்றத்தில் வழிதவறி காட்டிற்குள் 4 நாள் தனியாக கழித்த கேரள பெண் – என்ன நடந்தது?

Byadmin

Apr 10, 2026


கேரளாவை சேர்ந்த சரண்யா

பட மூலாதாரம், Saranya GS

படக்குறிப்பு, கேரளாவை சேர்ந்த சரண்யா கர்நாடகாவில் மலையேற்றம் சென்றிருந்த நேரத்தில், ​​திரும்பி வரும்போது வழிதவறி, நான்கு நாட்கள் காட்டில் காணாமல் போயிருந்தார்.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலையேற்றப் பாதையில் வழிதவறி 4 நாட்களாகக் காணாமல் போயிருந்த தொழில்நுட்ப வல்லுநர் சரண்யா ஜி.எஸ், இப்போது தனது அடுத்த மலையேற்றத்திற்குச் செல்லத் தயங்குகிறார்.

அடுத்த மாதம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதிக்கு மலையேற்றப் பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

அவருக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் தயக்கத்தின் பின்னணியில், தனக்குப் பிடித்தமான செயலுக்குத் தனது குடும்பத்தினரிடம் எதிர்காலத்தில் ஒப்புதல் பெறுவது குறித்த சிக்கல் மட்டுமல்லாது, பல தனிப்பட்ட விஷயங்களும் தொடர்புடையதாக உள்ளன.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 36 வயதான மென்பொருள் பொறியாளர் சரண்யா பிபிசி ஹிந்தி சேவையிடம் கூறுகையில், “தற்போதைய பிரச்னை என்னவென்றால், மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்குகிறார்கள். இது அசௌகரியமாக உள்ளது. மக்கள் என்னை கவனிப்பதை எப்படிக் கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

கூர்க் மாவட்டம், மடிக்கேரியில் இரண்டரை மணிநேர மலையேற்றத்தின் போது சரண்யாவுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்குப் பிறகு, மலையேற்றப் பாதை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் இறுதி செய்யப்படுவதை உறுதி செய்யும் வரை, அடுத்த நான்கு நாட்களுக்கு மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு வனத்துறை தடை விதித்தது.

By admin