• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

சரப்ஜித் கவுர்: பாகிஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்த இந்திய பெண் தற்போது எங்கே?

Byadmin

Jan 6, 2026


சரப்ஜித் மற்றும் நசீர்

பட மூலாதாரம், Ahmad Pasha

படக்குறிப்பு, சரப்ஜித்தும் நசீரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்ததாக சரப்ஜித்தின் வழக்கறிஞர் கூறுகிறார்.

சுற்றுலா விசாவில் பாகிஸ்தான் வந்து, அங்கு நசீர் ஹுசைன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இந்தியப் பெண் சரப்ஜித் கவுரும் அவரது கணவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சர்தார் ரமேஷ் சிங் அரோரா உறுதிப்படுத்தியுள்ளார்.

ரமேஷ் சிங் அரோராவின் தகவல்படி, 48 வயதான சரப்ஜித் கவுர் வரும் வியாழக்கிழமை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்றும், அதே வேளையில் அவரது பாகிஸ்தானிய கணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி சீக்கிய யாத்திரிகர்கள் குழுவுடன் பாகிஸ்தான் சென்ற சரப்ஜித் கவுரின் விசா காலம் நவம்பர் 13 உடன் முடிவடைந்தது.

எனினும், அவர் இந்தியா திரும்பவில்லை. இதற்கிடையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஷேக்ஹுபுராவைச் சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சரப்ஜித் பாகிஸ்தானிலேயே தங்கியுள்ளார்.

ஜனவரி 4-ஆம் தேதி, சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோர் இருப்பிடம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, அந்நாட்டு உளவுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக ரமேஷ் சிங் அரோரா பிபிசி உருதுவிடம் தெரிவித்துள்ளார்.

By admin