• Fri. Mar 28th, 2025

24×7 Live News

Apdin News

சவேந்திர, வசந்த, ஜகத், கருணா ஆகிய நால்வருக்குப் பிரிட்டன் அதிரடித் தடை!

Byadmin

Mar 25, 2025


இலங்கையின் முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது.

உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளவர்கள் என்று தெரிவித்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே பிரிட்டன் தடை விதித்துள்ளது.

அதற்கமைய இவர்கள் நால்வரும் பிரிட்டனுக்கான பயணங்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பிரிட்டனுக்குள் சொத்துக்களைச் சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போரின்போது இடம்பெற்ற சட்டவிரோதக் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்படி நால்வரும் பொறுப்புக்கூற வேண்டியுள்ளவர்கள் என்று தெரிவித்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ள செய்தி பிரிட்டன் அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin