• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

சாகரகன்யா: கப்பலுக்குள் பாம்புகளை கண்டு தொழிலாளர்கள் அச்சம் – என்ன நடக்கிறது?

Byadmin

Mar 7, 2026


சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

பட மூலாதாரம், UGC

கடந்த மூன்று மாதங்களாக, விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பலுக்குள் நுழைய ஊழியர்களும் தொழிலாளர்களும் பயப்படுகிறார்கள். அந்தக் கப்பலின் பெயர் சாகரகன்யா.

இதுவொரு கடல் ஆராய்ச்சிக் கப்பல். அதில் பாம்புகள் இருப்பதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சில நேரங்களில் பாம்புகள் காணப்பட்டன. இது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கப்பல் பழுது பார்ப்பதற்காக அந்தமானில் இருந்து விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்திற்கு சுமார் நூறு நாட்களுக்கு முன்பு இந்தக் கப்பல் வந்தது. மார்ச் 3ஆம் தேதி, கப்பலில் ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர் பாம்பு மீட்பர் நாகராஜு குழுவினரால் அது மீட்கப்பட்டது.

“அதுவொரு நாகப் பாம்பு, சுமார் 8 அடி நீளம் கொண்டது,” என்று நாகராஜு பிபிசியிடம் கூறினார்.

“நான் அங்கு சென்றபோது, தொழிலாளர்கள் கப்பலில் ஒரு மலைப்பாம்பு இருப்பதாக வீடியோக்களை காட்டினர். அதற்கு முன்பு ஒரு பாம்பு இருப்பதாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்தே நான் அங்கு சென்றேன். ஆனால், அந்த மலைப்பாம்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லைம்,” என்று நாகராஜு பிபிசியிடம் கூறினார்.

By admin