• Wed. Aug 6th, 2025

24×7 Live News

Apdin News

சாதிய கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டங்களை குறைந்தளவில் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை: வைகோ  | Vaiko accused to special laws to prevent caste-based killings cannot be implemented even to a minimum

Byadmin

Aug 6, 2025


சென்னை: தமிழகத்​தில் சாதிய கொலைகளைத் தடுப்​ப​தற்​கான சிறப்​புச் சட்​டங்​களை குறைந்​தள​வில் கூட நடை​முறைப்​படுத்த முடி​யாத நிலை இருப்​ப​தாக மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நீதிபதி வேல்​முரு​கன் கூறி​யுள்​ளது போல தமிழகத்​தில் சாதிய கொலைகள் அதி​கரித்து வரு​வது அதிர்ச்சி தரு​கிறது. சாதிய படு​கொலைகளை கடுமை​யான சிறப்​புச் சட்​டங்​கள் மூலமே தடுக்க முடி​யும் என்று அரசுக்கு கோரிக்​கைகள் முன்​வைக்​கப்​படு​கின்​றன.

அத்​தகைய சட்​டங்​கள் இன்​றியமை​யாதது என்​றாலும், ஏற்கெனவே நடை​முறை​யில் உள்ள சிறப்பு சட்​டங்​கள் குறைந்த சதவீத அளவு கூட நடை​முறைப்​படுத்த முடி​யாத நிலைமை இருப்பதற்​கான காரணங்​களை​யும் கண்​டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அப்​போது​தான் சாதிய படு​கொலைகளை நிகழ்த்​து​வோர் அஞ்​சும் நிலைமை ஏற்​படும். தூத்​துக்​குடி கவின் செல்வ கணேஷ், விருத்தாச்​சலம் ஜெயசூர்யா போன்ற பட்​டியல் இனத்​தைச் சேர்ந்த இளைஞர்​களோடு சாதிய கொலை எனும் சமூக தீமைக்கு முற்றுப்​புள்ளி வைக்க முடி​யும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

கண்​டனம்: அவர் வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​யில், “வீரம் செறிந்த இலங்கை தமிழர் விடு​தலைப் போராட்​டத்​தை​யும், இலங்கை தமிழர்​களை​யும் தவறாக சித்​தரித்து திரைப்​படங்​கள் வெளி​யிட்டு வரலாற்றை சிதைக்​கும் முயற்சி கடும் கண்​டனத்​துக்​குரிய​தாகும்.

அந்த வகை​யில் தெலுங்கு திரைப்​பட​மான கிங்​டம், இலங்கை தமிழர்​களை மிக மோச​மாக சித்​தரித்து காட்​டு​கிறது. எனவே தமிழகத்​தில் கிங்​டம் தெலுங்கு திரைப்​படம் திரையரங்​கு​களில் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தற்கு தடை வி​திக்க வேண்​டும்​” என தெரி​வித்​துள்​ளார்​.



By admin