• Mon. May 5th, 2025

24×7 Live News

Apdin News

சாதிவாரி கணக்கெடுப்பு: 50% இடஒதுக்கீடு வரம்புக்கு முடிவு கட்டப்படுமா? – ஓர் அலசல்

Byadmin

May 5, 2025


சாதிவாரிக் கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகள்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காமில் தாக்குதல் சம்பவம் மக்களால் அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவியது.

ஆனால், அடுத்து நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது

1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் 1951-ஆம் ஆண்டில் இருந்து பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சாதி அடிப்படையிலான அரசியல் வளர்ந்து வரும் சூழலில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளும் அதிகரித்தது.

சமூக – பொருளாதார அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அதன் தரவுகள் வெளியிடப்படவில்லை.

By admin