• Mon. Mar 30th, 2026

24×7 Live News

Apdin News

சாதி மதம் அற்றவன் சான்றிதழ்.. பார்த்திபன் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Byadmin

Mar 28, 2026


தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த உஸ்தான் பகத் சிங் திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நல்லா நாகப்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக பார்த்திபன் நடித்துள்ளார்.

படம் ரிலீசுக்கு முன் ஐதராபத்தில் பட நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்துகொண்டு பேசியபோது, தான், ஒரு நாயுடு பையன் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு அவ்வளவாக வராது’என்று கூறினார். தனது சாதி குறித்து பார்த்திபன் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதன்பின் பார்த்திபன் இப்படி பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

சாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில் இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன்.

இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காதுஎன்று கூறியிருந்தார்.

By admin