• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்த நீதிபதி கூறியது என்ன?

Byadmin

Apr 6, 2026


சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு
படக்குறிப்பு, ஜெயராஜ், பென்னிக்ஸ்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தவிர, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது.

By admin