• Sun. Dec 7th, 2025

24×7 Live News

Apdin News

சாத்தூர் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

Byadmin

Dec 6, 2025


இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேர்தல் ஆணையம் வழங்கிய வடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. பலதரப்பட்ட விவரங்கள் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வழங்கிய இந்த படிவத்தினை திரும்ப பெற வேண்டும். கிராம மக்கள் அனைவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இப்படிவத்தை பூர்த்தி செய்ய வேலைக்குச் செல்லாமல் ஒரு நாள் செலவிட வேண்டியுள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்படுகிறது. மேலும், 23 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்த விவரம் கேட்டக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை கிராம மக்கள் பலர் எடுக்க முடியவில்லை. பல நேரம் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.

எனவே, ஏழை, எளிய மக்கள் வாக்களிக்கும் உரிமையை பறிக்காமல், எளிதாக வாக்களிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக் கூடாது. இதில், தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்த வேண்டும். எனவே, தற்போது வழங்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள குழப்பங்களுக்களை நீக்கி எளிய வகையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

By admin