• Thu. Oct 17th, 2024

24×7 Live News

Apdin News

சாம்சங் இந்தியா போராட்டம்: சுமுக உடன்பாட்டின் பின்னணி – 5 முக்கியக் கேள்விகள்

Byadmin

Oct 17, 2024


சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் நடந்து வந்த தொழிலார்களின் போராட்டம் முடிவை எட்டியுள்ளது.

’38 நாட்களாக நீடித்து வந்த தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக’ அமைச்சர் எ.வ.வேலு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று அறிவித்திருந்தார்.

“இரு தரப்பு உடன்பாட்டை தொழிலாளர்களும் ஏற்றுக் கொண்டனர். நாளை (அக்டோபர் 17) முதல் அவர்கள் வேலைக்குச் செல்ல உள்ளனர்,” என்று கூறியிருந்தார் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்.

தங்களின் பிடிவாதத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் தளர்த்தியதால் தான் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறுகிறார், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

By admin