• Sat. Oct 19th, 2024

24×7 Live News

Apdin News

சாம்சங் இந்தியா: போராட்டம் முடிந்த பிறகும் தொழிலாளர்கள் பணியில் சேர முடியாதது ஏன்?

Byadmin

Oct 19, 2024


சாம்சங் இந்தியா தொழிலாளர் பிரச்னை

பட மூலாதாரம், @TRBRajaa/X

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

சாம்சங் இந்தியா நிர்வாகத்துக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது.

“ஆனால், நிர்வாகம் அளிக்கும் பயிற்சியை முடித்த பின்னரே சேர்த்துக் கொள்வோம் எனக் கூறிவிட்டதால், பணியில் சேர முடியவில்லை,” என்கின்றனர் தொழிலாளர்கள்.

தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை திசை திருப்பும் முயற்சியில் சாம்சங் இந்தியா நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக, சி.ஐ.டி.யு குற்றம் சுமத்துகிறது.

ஆனால், “நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவே பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் சென்னை சாம்சங் இந்தியா ஆலையில் தற்போது நம்பிக்கையும் அமைதியும் ஏற்பட்டுள்ளதாகவும்” சாம்சங் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பிபிசி தமிழுக்கு அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

By admin