• Fri. Feb 21st, 2025

24×7 Live News

Apdin News

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தான் இரண்டும் மோதும் போட்டி எப்போது? முழு விவரம்

Byadmin

Feb 19, 2025


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், X/@ICC

  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன.

நாளை பிற்பகல் பகலிரவு ஆட்டமாக நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி மோதுகிறது.

பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்ட இந்திய அணி தனது போட்டிகளை எங்கே விளையாடும்? கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எங்கே, எப்போது நடக்கும்?

சாம்பியன்ஸ் டிராபி என்றால் என்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த தொடர், தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. 2017-ஆம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபி நடக்கவில்லை.

By admin