• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கே அதிக பலனா? நியூசிலாந்து ஊடகங்கள் சொல்வது என்ன?

Byadmin

Mar 12, 2025


மிட்செல் சாண்ட்னர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர்

சாம்பியன்ஸ் டிராபி 2025இன் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு நியூசிலாந்து அணி நாடு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, இப்போது அங்குள்ள ஊடகங்களில் அது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.

நியூசிலாந்தின் முன்னணி நாளிதழான நியூசிலாந்து ஹெரால்டு, “1.438 பில்லியன் மக்கள் தொகையையும் கிரிக்கெட்டுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்ட இந்தியா, மும்பையைவிட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்தை தோற்கடித்தது” என்று குறிப்பிட்டது.

இந்தியாவின் வெற்றிக்கான காரணங்களைப் பட்டியலிட்டு, “இந்த வெற்றியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் போட்டியில் இந்தியா சிறந்த அணியைக் கொண்டிருந்தது, மேலும் பல விஷயங்களும் அதற்குச் சாதகமாக அமைந்தன.

பாகிஸ்தான் போட்டியை நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு விளையாட மறுத்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஐந்து போட்டிகளையும் துபையில் மட்டுமே விளையாடியது. அதேபோல், இந்திய அணி துபை மைதானத்திற்குப் பழகிவிட்டது. பயணங்களில் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டது.

By admin