• Mon. Feb 3rd, 2025

24×7 Live News

Apdin News

சார்லஸ் ஷோப்ராஜ்: திகார் சிறையில் ஆதிக்கம் செலுத்திய இவர் தப்பித்தது எப்படி?

Byadmin

Feb 3, 2025


 சார்லஸ்  ஷோப்ராஜ் திகார் சிறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சார்லஸ் ஷோப்ராஜ்

கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி அன்று, திகார் சிறையின் செய்தித் தொடர்பாளரும் சட்ட ஆலோசகருமான சுனில் குமார் குப்தா, தனக்கு கிடைத்த ஏஎஸ்பி பதவி நியமனக் கடிதத்துடன் சிறைக் கண்காணிப்பாளர் பி.எல்.விஜ் என்பவரின் அலுவலகத்தை அடைந்தார்.

திகார் சிறையில் வேலை கிடைத்தவுடனேயே, அவர் வடக்கு ரயில்வேயில் தனது வேலையை ராஜினாமா செய்தார். அப்போது அவருக்கு 24 வயது மட்டுமே ஆகியிருந்தது.

மே மாதம் 7 ஆம் தேதி அன்று அவர் ரயில்வே வேலையில் இருந்து விலகினார். அடுத்த நாளே புதிய வேலையில் சேர திகார் சிறைக்கு அவர் சென்றார்.

“சிறை கண்காணிப்பாளர் பி.எல்.விஜ் என்னைப் பார்த்து ‘இங்கு ஏஎஸ்பி என்ற பதவியே இல்லை’ என்று கூறினார். இதைக்கேட்டு நான் திகைத்துப் போனேன். ரயில்வே வேலையை விட்டுவிடுவதற்கு முன் என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். என்ன செய்வது என்று அறியாமல் அங்கிருந்து வெளியில் வந்து யோசித்துக்கொண்டிருந்தேன்”, என்று சுனில் குப்தா நினைவு கூர்ந்தார்.

By admin