• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

சாவர்க்கர்: பிரிட்டிஷாரிடம் இருந்து தப்பிக்க பிரான்ஸில் கடலில் குதித்தபோது என்ன நடந்தது?

Byadmin

Feb 20, 2025


விநாயக் தாமோதர் சாவர்க்கர்

பட மூலாதாரம், savarkarsmarak.com

படக்குறிப்பு, விநாயக் தாமோதர் சாவர்க்கர் (கோப்பு படம்)

சாவர்க்கரால் ஈர்க்கப்பட்டவரும், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸுக்கு அடிக்கடி வருபவருமான மதன்லால் திங்ரா, 1909 ஜூலை 1ஆம் தேதி இந்திய விவகார அமைச்சரின் உதவியாளரான கர்சன் வில்லியை சுட்டுக் கொன்றார்.

வில்லியின் கொலையில் சாவர்க்கரின் பங்கை பிரிட்டிஷ் அரசால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் மதன்லாலுக்கும் சாவர்க்கருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்ததையும், திங்க்ரா குற்றமற்றவர் என்ற மனுவை தயாரித்தவர் சாவர்க்கரே என்பதையும் அது புரிந்துகொண்டது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்ரா தனது அறிக்கையைப் படிக்க அனுமதிக்க்கப்படவில்லை. அந்த நேரத்தில் சாவர்க்கர் அதை ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளரின் உதவியுடன் லண்டன் நாளிதழில் வெளியிட்டார்.

மதன்லால் திங்ரா மீது விசாரணை நடந்தது. விசாரணை துவங்கிய ஒன்றரை மாதங்களுக்குள், அதாவது 1909 ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால் இதற்கிடையில் நாசிக்கில் பிரிட்டிஷ் கலெக்டர் ஆர்தர் ஜாக்சனின் கொலையில் சாவர்க்கரின் பெயர் அடிபட்டதால் லண்டனில் அவருக்குப் பிரச்னைகள் அதிகரித்தன.

By admin