• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

“சிஐஏவின் ஏமாற்றும் உத்தி” – அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு இரானுக்குள் எப்படி நடந்தது?

Byadmin

Apr 6, 2026


எஃப்15 போர்விமானம்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமை அன்று தெற்கு இரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தின் காணாமல் போன வீரரை அமெரிக்கா மீட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை சமூக வலைதளத்தில் இந்த மீட்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே “மிகவும் துணிச்சலான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றைச் செய்து முடித்துள்ளது” என்று கூறினார். அந்த அதிகாரி “இப்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்!” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த விமானத்தில் இரண்டு வீரர்கள் இருந்தனர், இருவரும் விமானத்திலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டிருந்தார்.

தங்களது வான் பாதுகாப்பு அமைப்பால் அந்தப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கை மற்றும் அது எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இங்கே:

By admin