• Tue. Dec 2nd, 2025

24×7 Live News

Apdin News

சிங்கப்பூரில் இரண்டே நாட்களில் 3 பேருக்கு தூக்கு தண்டனை ஏன்?

Byadmin

Dec 2, 2025


சிங்கப்பூர்: போதைப்பொருள் வழக்குகளில் இரண்டு நாட்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகளவில் மிகக் கடுமையான போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் உள்ள நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கான அவசிய நடவடிக்கை இது என சிங்கப்பூர் கூறுகிறது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று பேர் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதன்மூலம், அந்நாட்டில் இந்தாண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2003ம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் மிக அதிகளவாகும்.

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணை நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இது நடந்துள்ளது.

உலகளவில் மிகக் கடுமையான போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் உள்ள நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. தெற்கு ஆசியாவில் பெரும் பிரச்னையாக உள்ள போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கான அவசிய நடவடிக்கை இது என சிங்கப்பூர் அரசு கூறுகிறது.

சிங்கப்பூரில் 15 கிராமுக்கு அதிகமாக டயாமார்ஃபின், 30 கிராமுக்கு அதிகமாக கோகெய்ன், 250 கிராமுக்கு அதிகமாக மெத்தம்ஃபெட்டமைன் மற்றும் 500 கிராமுக்கு அதிகமாக கஞ்சாவை (cannabis) விற்பது, வழங்குவது, ஓரிடத்திற்கு கொண்டு செல்வது அல்லது அதை கையாள்வது உள்ளிட்ட கடத்தல் நடவடிக்கைகளில் ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

எதிர்ப்பு எழுவது ஏன்?

இதுதொடர்பாக வழக்கு தொடுத்துள்ள ஏழு ஆர்வலர்களும், சிங்கப்பூரின் கட்டாய மரண தண்டனை, அரசியலமைப்பு வழங்கியுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமைகளையும் சட்டத்தின் முன் சம பாதுகாப்பு ஆகியவற்றையும் மீறுவதாக வாதிடுகின்றனர்.

By admin