• Thu. Dec 18th, 2025

24×7 Live News

Apdin News

சிட்னி துப்பாக்கிச்சூடு: இந்தியர் சஜித் அக்ரம், அவரது மகன் நவீத் பற்றி ஆஸ்திரேலிய ஊடகங்கள் சொல்வது என்ன?

Byadmin

Dec 18, 2025


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக பல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தாக்குதல் நடந்த போது அங்கு ஒரு யூத நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் இருவரில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளன. அந்த இருவரும் சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில் பிலிப்பின்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர், மேலும் அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி தெரிவித்தார்.

தந்தை சஜித்தும், மகன் நவீத்தும் கடந்த மாதம் பிலிப்பின்ஸ் சென்றதை ஆஸ்திரேலிய போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

By admin