• Fri. Jun 13th, 2025

24×7 Live News

Apdin News

சித்து மூஸே வாலா கொல்லப்பட்டது ஏன்? கொலைக்கு பொறுப்பேற்ற கேங்ஸ்டர் பிபிசியிடம் கூறியது என்ன?

Byadmin

Jun 12, 2025


சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது ஏன்? கொலைக்கு பொறுப்பேற்ற கேங்ஸ்டர் பிபிசியிடம் கூறியது என்ன?
படக்குறிப்பு, சித்து மூஸே வாலா 2022ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்

பஞ்சாபி ஹிப்-ஹாப் நட்சத்திரமான சித்து மூஸே வாலா, கூலிப்படையைச் சேர்ந்த நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சில மணிநேரங்களுக்குள், கோல்டி பிரார் என்ற பஞ்சாபி கேங்ஸ்டர் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டதாக பேஸ்புக்கில் பொறுப்பேற்றார்.

ஆனால் கொலை நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், யாரும் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவில்லை. கோல்டி பிரார் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவர் இருக்கும் இடமும் தெரியவில்லை.

இப்போது பிபிசி ஐ புலனாய்வு, பிராரை தொடர்புகொண்டு சித்து மூஸே வாலா எப்படி, ஏன் குறிவைக்கப்பட்டார் என்று கேட்டது.

By admin