• Sun. Apr 27th, 2025

24×7 Live News

Apdin News

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகுவது போருக்கான அறைகூவல்! பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் பேட்டி!!

Byadmin

Apr 27, 2025


பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
படக்குறிப்பு, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்

இந்தியாவின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற மறுநாளே பாகிஸ்தானுடனான 1960ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் உடன்படிக்கையை இடைநிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் முடிவுக்கு எதிராக உலக வங்கியை அணுகப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இப்போது இந்தியா ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது போருக்கான முன்னறிவிப்பாகக் கருதப்படும்” என்று தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு பாத்தியப்பட்ட சிந்து நதிநீரை வழங்குவதை இந்தியாவால் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஹபீஸ் சயீத் பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அத்தகையவர்கள் இப்போது செயலற்றவர்களாகிவிட்டதாகக் கூறினார். பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

போர் பிரகடனமா? அச்சுறுத்தலா?

சிந்து நதிநீர் உடன்படிக்கையை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு குறித்து பிபிசி நிருபர் ஆசாதேஹ் மோஷீரி, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்டதற்கு, இந்தியா இந்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலக முடியாது என்று அவர் பதிலளித்தார்.

By admin