• Sat. Apr 26th, 2025

24×7 Live News

Apdin News

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா தன்னிச்சையாக நிறுத்தி வைக்க முடியுமா? பாகிஸ்தான் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

Byadmin

Apr 26, 2025


சிந்து நதி ஒப்பந்தம், இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘இந்த நதிகளில் ஓடும் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு, ஆனால் நதிநீரை தடுத்து நிறுத்தவோ அல்லது நதிகளின் போக்கை மாற்றவோ அதற்கு உரிமை இல்லை’

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22 அன்று நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ள நரேந்திர மோதி அரசு, அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்றும், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணை பிரதமருமான இஷாக் தார் பாகிஸ்தான் ஊடகத்திடம் கூறுகையில், இந்திய அரசு இப்படியான முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது என்றார்.

“இந்தியா ஏற்கெனவே சிந்து நதி ஒப்பந்தத்துக்கு உறுதி எடுத்துள்ளது. நீரை தேக்கி வைப்பதற்காக சில நீர்த்தேக்கங்களையும் கட்டியுள்ளது. உலக வங்கியும் இதில் தொடர்புடையதாக உள்ளது, இந்த ஒப்பந்தம் கட்டாயமான ஒன்று.”

By admin