• Sun. Sep 14th, 2025

24×7 Live News

Apdin News

சினாய் மலை: கிறித்தவர், இஸ்லாமியர் மற்றும் யூதர்களின் புனித தலத்திற்கு ஆபத்தா? புதிய சுற்றுலாத் திட்டத்திற்கு எதிர்ப்பு

Byadmin

Sep 14, 2025


செயிண்ட் கேத்தரின்ஸ்

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, 6 ஆம் நூற்றாண்டு செயின்ட் கேத்தரின்ஸ் என்பது உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் கிறிஸ்தவ மடாலயமாகும்.

பல ஆண்டுகளாக, சுற்றுலாப் பயணிகள் பெடோயின் வழிகாட்டிகளுடன் சினாய் மலையில் ஏறி, பாறைகள் சூழ்ந்த அழகிய இடத்தில் சூரிய உதயத்தை ரசித்து வந்துள்ளனர். சிலர் மற்ற மலையேற்ற பயணங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.

இப்போது, யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய அனைவரும் புனிதமாகக் கருதும் இந்த சினாய் மலையில் ஒரு பெரிய சுற்றுலா திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் மொழியில் ‘ஜபல் மூசா’ என என அழைக்கப்படும் இந்த மலையில், மோசேக்கு பத்து கட்டளைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பைபிள் மற்றும் குர்ஆன் கூற்றுப்படி, எரியும் புதரில் இருந்து மோசேவிடம் கடவுள் பேசிய இடம் இதுதான் என்றும் பலர் கருதுகின்றனர்.

இந்த மலையில் 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் கேத்தரின் மடாலயம் உள்ளது. இது கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் கீழ் இயங்குகிறது. அதை மூட எகிப்து அரசு திட்டமிட்டதாக கூறப்பட்டாலும், கிரேக்கத்தின் அழுத்தத்தால் அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.

By admin