• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

சியா கோயல்: காதலருடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றதாக பெண் கைது – என்ன நடந்தது?

Byadmin

Jun 24, 2026


கேதனுக்கும் சியாவுக்கும் பிப்ரவரி மாதமே நிச்சயம் செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, புனேயின் மாவல் தாலுகாவில் உள்ள கஹுஞ்சேவைச் சேர்ந்த கேதன் அகர்வாலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு புனே மார்க்கெட் யார்டு பகுதியைச் சேர்ந்த சியா கோயல் என்ற இளம் பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞரை லோஹாகட் கோட்டையிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு விபத்து போல சித்தரிப்பதற்காக , இளம் பெண்ணும் அவரது காதலரும் சேர்ந்து, அந்தப் பெண்ணின் வருங்கால கணவரை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் பெயர் கேதன் அகர்வால்.

சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி ஆகியோரை கொலை குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.

By admin