• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

சிரியாவில் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய மோதல் – நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள்

Byadmin

Mar 9, 2025


சிரியா

பட மூலாதாரம், EPA

சிரியாவில் பாதுகாப்பு படைக்கும், அலவைட் மத சிறுபான்மையினருக்கும் இடையே பல நாட்களாக நடந்து வரும் மோதலில், நூற்றுக்கணக்கான அலவைட் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டின் தலைவர் அகமது ஷாரா அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் அலவைட் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட சுமார் 30 “படுகொலைகளில்” சுமார் 745 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு செயல்படும் ‘சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ (SOHR) தெரிவித்துள்ளது.

இந்தக் கூற்றுக்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

“நாம் முடிந்தவரை தேசிய ஒற்றுமையையும் சிவில் அமைதியையும் பாதுகாக்க வேண்டும். மேலும் கடவுளின் அருளால், இந்த இந்த நாட்டில் நாம் ஒன்றாக வாழ முடியும்” என்று அகமது ஷாரா கூறினார்.

By admin